
பட்டுப்பூச்சிகளை அழித்து
ஆடையாக உடுத்தினோம்
மாடுகளை அழித்து
செருப்புகளாக கால்களில் போட்டோம்
மனிதா! உன்னை அழித்தால்
என்ன? தர முடியும்
முடியும் உன்னில் இருக்கும்
கண்களை தர முடியும்
நீ! மண்ணுக்குள் செல்லும் போது
பிறர்க்கு பயன்படாமல் மண்ணுக்குள்-செல்கின்றாய்
மண்ணுக்குள் செல்லாதே நீ!
மறுபடியும் இவ்வுலகில் வாழ
உனக்கு ஓர் சந்தர்ப்பம்
தானம் செய்திடுவீர்
கண்களை மண்ணுக்குள் செல்லும் முன்!.......

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக