
உன் மனதில் கிடக்கும்
மாற்றங்களை சிந்தனை செய் !
மாற்றங்களை சிந்தனை செய் !
இயற்கையின் அழகை
பார்த்து சிந்தனை செய்!
விழிப்புடன் இருக்கும் விலங்குகளை
பார்த்து சிந்தனை செய்!
வானம் ஏன்? பரந்து
விரிந்திருக்கிறது என்று சிந்தனை செய் !
சூரியனின் கதிர்கள் ஏன்?
பூமியை நோக்கி
விழுகின்றன என்று சிந்தனை செய்!
பணக்காரர்களுக்கு மட்டும் ஏன் ?
இரத்தக் கொதிப்பு வருகிறது
என்று சிந்தனை செய்!
நாம் அனைவரது வாழ்க்கையும்
ஏன் ? கல்லறையில் முடிவடைகிறது
என்று சிந்தனை செய் !
நாம் ஏன் ? உயிரற்ற
கற்களை கடவுளாக
வழிபடுகிறோம் என்று
சிந்தனை செய்!
சிந்தனை செய்! சிந்தனை செய்!
உன்னை பார்த்தே
சிந்தனை செய்!
-முத்துவைரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக